நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

பெங்களூரில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இல்லை: எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்

News image

Center-Center-Bangalore

Updated On :25 நிமிடங்கள் முன்பு

பெங்களூரு: பெங்களூரில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இல்லை என்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பெங்களூரில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இருப்பதாக தகவல் பரவியதால், எரிபொருள் நிலையங்களில் குவிந்த மக்கள் பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்பி வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர் சித்தார்த் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கர்நாடகத்தில் உள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் எல்லா சில்லறை வர்த்தக நிலையங்களிலும் போதுமான அளவுக்கு பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளது. மேலும், எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள், மொத்த விற்பனைக் கிடங்குகளில் இருந்து சில்லறை வர்த்தக நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது.

இதில் எவ்வித தடங்கலும், இடைஞ்சலும் இல்லை. எரிபொருள் விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் எரிபொருள் மறுநிரப்பு செயல்பாடுகளும் சீராக உள்ளன. எல்லா சில்லறை வர்த்தக நிலையங்களும் இயல்பாக செயல்பட்டு வருகின்றன.

கர்நாடகத்தில் உள்ள நுகர்வோரின் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு எரிபொருள் இருப்பு உள்ளது. எனவே, எரிபொருள் தட்டுப்பாடு என்ற அச்சத்தில் யாரும் பெட்ரோல், டீசலை அதிகளவில் வாகனத்தில் நிரப்பிக்கொள்ள வேண்டாம். மாநிலம் முழுவதும் தங்குத் தடையில்லாமல் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால், யாரும் பயப்பட வேண்டாம். எனவே, வழக்கம்போல எரிபொருளை பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.