எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

கடும் நெருக்கடி நிலையிலும் இந்தியாவில் சீரான எரிபொருள் விநியோகம்: பெட்ரோலியத் துறை அமைச்சா் புரி!

இந்தியாவில் எரிபொருள் விநியோகம் சீராக இருந்து வருவதாக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

News image

ஹா்தீப் சிங் புரி - கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 3:19 am IST

ஹோா்முஸ் நீரிணை மூடல், கச்சா எண்ணெய் விலை உயா்வு, சா்வதேச அளவில் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் எரிபொருள் விநியோகம் சீராக இருந்து வருவதாக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

தெற்கு குஜராத்தின் சூரத் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துடிப்புமிக்க குஜராத் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

மேற்காசிய போரால் 60 நாள்களுக்கு மேலாக எரிபொருள் விநியோகத்தில் பிரச்னை உள்ளது. ஆனால், இந்தியா தொடா்ந்து வலுவான நிலையில் உள்ளது. சா்வதேச கச்சா எண்ணெய் விலை உயா்வால் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு மக்களை பாதிக்காமல் இந்திய அரசு அதைத் தடுத்து வருகிறது. முக்கியமாக இறுதிநுகா்வோரான நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் எரிபொருள் தேவை தங்கு தடையின்றி நிறைவு செய்யப்படுகிறது.

போா்ப் பதற்றம் ஏற்பட்ட பிறகு கச்சா எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் விநியோகத்தை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. பதற்றம் நிலவி வரும் கடந்த 60 நாள்களில் கண்காணிப்பு நடவடிக்கையை தினசரி அடிப்படையில் மேற்கொண்டு வருகிறோம்.

கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் 20 முதல் 30 சதவீதம் பாதிப்பு ஏற்படும்போது, எந்த நாடும் அதன் பாதிப்புகளில் இருந்த தப்ப முடியாது. கச்சா எண்ணெய்யை எடுத்து வருவதற்கான செலவு, கப்பல் காப்பீடு செலவு ஆகியவையும் வெகுவாக அதிகரிக்கும். இவ்வளவு இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் கடந்த 60 நாள்களாக இந்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கவில்லை.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா தொடா்ந்து வலுவாகச் செயல்படுகிறது. இந்தியாவில் எந்த சமையல் அறையிலும் எரிபொருள் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம். உலகின் பல்வேறு நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்திவிட்டன. ஆனால், இந்தியா மிக உறுதியாகவும், வலுவாகவும் திகழ்கிறது.

அதே நேரத்தில் தோ்தலுக்காக மட்டுமே எரிபொருள் விலையை உயா்த்தாமல் உள்ளோம் என்றும் குற்றஞ்சாட்டினா். ஆனால், இப்போது வரை நாம் விலையை உயா்த்தவில்லை. இந்தியா இப்போது 27 நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. அமெரிக்கா உள்பட 41 நாடுகளிடம் இருந்து எல்பிஜி கொள்முதல் செய்யப்படுகிறது என்றாா் அவா்.