பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கங்கமாதா சமுதாய மக்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று அபிகாரா செளடய்யா மகாசபை தலைவர் அம்பிகா ஜலகார் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அம்பிகா, பெஸ்தா, கோலி, கப்பலிகா உள்ளிட்ட 39 பிரிவுகளைக் கொண்ட கங்கமாதா சமுதாய மக்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் வாய்ப்புத் தர வேண்டும்.
மாநிலத்தில் சுமார் 40 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 18 தொகுகளில் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். எங்கள் சமுதாயத்தினருக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியை அபிகாரா செளடய்யா மகாசபை ஆதரிக்க முடிவு செய்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கு? - கனிமொழி கேள்வி | DMK | TVK

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்






