பணியிட மாற்றம் செய்த மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டதையடுத்து, ஹாசன் மாவட்ட ஆட்சியராகயிருந்த ரோகிணி சிந்தூரி விடுவிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை ரன்தீப் பொறுப்பேற்றார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தவர் ரோகிணி சிந்தூரி. அண்மையில் இவரை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது.மைசூரு ஆட்சியராகப் பணியாற்றிய ரன்தீப்பை ஹாசன் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ரோகிணி சிந்தூரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் முறையிட்டார். இதையடுத்து, அரசின் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது. ஹாசன் மாவட்ட ஆட்சியராக ரோகிணி சிந்தூரி தொடர்ந்தார். இந்த நிலையில், மத்திய நிர்வாக தீர்பாயம், மாநில அரசின் உத்தரவை உறுதி செய்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை ஹாசன் மாவட்ட ஆட்சியராக ரன்தீப் பொறுப்பேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


