பக்கவாதத்தை அலட்சியப்படுத்தக் கூடாது என்று நரம்பியல் மருத்துவர் தீபக் தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை நாராயணா மருத்துவக் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற பக்கவாத விழிப்புணர்வு முகாமில் அவர் பேசியது: இதயத்தில் ரத்தம் உறைந்தால், மாரடைப்பு ஏற்படுவதைபோல, மூளையில் ரத்தம் உறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது. குறிப்பாக 50 வயதைக் கடந்தவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 6 மணி நேரத்துக்குள் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தாமதித்தால் பக்கவாத பாதிப்புகளைக் குணப்படுத்துவது சிரமம். அண்மைக்காலமாக பக்கவாதத்தை குணமாக்கும் நவீன தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அண்மையில் நாராயணா மருத்துவமனையில் 102 வயதான முதியவருக்கு சிகிச்சை அளித்து குணமாக்கியுள்ளோம். எந்த ஒரு நோயும், ஆரம்பக்கட்டத்தில் சிகிச்சை அளித்தால் குணமாக்க முடியும். காலதாமதம் நோய்களை நிரந்தரமாக்கிவிடும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!

தனுஷ் நடித்த ஓம் திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ!
நியூயார்க் மேயர் வெறுப்பைப் பரப்புகிறார்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay


