திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

முன்னாள் அமைச்சர் திப்பேசாமி காலமானார்

கர்நாடக முன்னாள் அமைச்சர் திப்பேசாமி புதன்கிழமை பெங்களூரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

கர்நாடக முன்னாள் அமைச்சர் திப்பேசாமி புதன்கிழமை பெங்களூரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சித்ரதுர்கா செல்லுகெரே வட்டம், காட்டப்பனஹட்டிய சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் திப்பேசாமி (76). இவர் சித்ரதுர்கா மாவட்டம், செல்லுகெரே சட்டப்பேரவைத் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மஜத ஆட்சியில் தேவெ கெளடா, ஜே.எச்.பாட்டீல் ஆகியோரின் அமைச்சரவையில் சிறிய நீர்ப்பாசனத் துறை, கலால் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 
பின்னர் பாஜகவில் இணைந்து ஜகலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்று, எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார். கடந்த சில நாள்களாக உடல் நலம் குன்றியதையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். புதன்கிழமை காலை அவர் காலமானார். அவருக்கு மனைவி விமலம்மா, மகன் குமாரசாமி, மகள் பவ்யா ஆகியோர் உள்ளனர். திப்பேசாமியின் மறைவுக்கு முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.