கர்நாடக சட்டப் பேரவை கூட்டங்களில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் அமைச்சர்களுக்கு துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் கடிதம் எழுதியிருக்கிறார்.
இதுதொடர்பான கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடக்கிறது.
இந்த நிலையில், சில அமைச்சர்கள் அவைக்கு வருகைதராமல் இருப்பது குறித்து பேரவை, மேலவைத்தலைவர்கள் வெளிப்படையாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் தீவிரமாகப் பங்காற்றி, , செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விரும்புகிறது.
அவையில் உறுப்பினர்கள் வெளிப்படுத்தும் விவகாரங்கள், தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முழுமையானபதில்களை வழங்க வேண்டும். மேலும் பேரவை, மேலவையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தால், கண்டிப்பாக கலந்துகொண்டு அவையின் விவாதத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும்.
இதற்காக அவையில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று பரமேஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

