கடந்த 3 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாவட்ட வாரியாக வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, தற்போது அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்த தேர்தல் ஆணையம், மொத்தத்தில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறியிருந்தது. இந்நிலையில், அஞ்சல் வழியே அனுப்பப்பட்ட வாக்குகளையும் சேர்த்தால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒட்டுமொத்தமாக 72.36 சதவீத் வாக்குகள் தற்போது பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இம்முறை நடைபெற்ற தேர்தலில் ஆண்கள் 73.24 சதவீதமும், பெண்கள் 71.08 சதவீதமும் வாக்களித்துள்ளனர். பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதவிர, 2008, 2013, 2018-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவீதங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹரி இயக்கத்தில் அதர்வா?

பஞ்சாப் கிங்ஸைப் பழிதீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்?

மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை வரவேற்கிறார் மமதா: அஸ்ஸாம் முதல்வர்

ஏப். 18ல் தமிழகத்தில் 3 இடங்களில் ராகுல் பிரசாரம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

