நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தேர்தல் முடிவுகளுக்கு பிறகே எதைப் பற்றியும் பேசுவேன்

தேர்தல் முடிவுகளுக்கு பிறகே எதைப் பற்றியும் பேசுவேன் என முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.

News image
Updated On :14 மே 2018, 9:23 pm

DIN

தேர்தல் முடிவுகளுக்கு பிறகே எதைப் பற்றியும் பேசுவேன் என முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
இதுகுறித்து ஹாசனில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை நான் எதைப் பற்றியும் பேசமாட்டேன். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் மஜதவின் பலம் என்ன என்பது பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்களுக்கு தெரியவரும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து நான் எதையும் கூற விரும்பவில்லை. கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று ஊடகங்கள் கூறுவதை நான் நம்ப தயாராக இல்லை.
தலித் ஒருவரை முதல்வராக்க தனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று முதல்வர் சித்தராமையா கூறியிருப்பதற்கு நான் எதுவும் கூற விரும்பவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.