சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தங்கிப் பணியாற்றி வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கு வங்கம் நோக்கிச் செல்லும் ரயில்களில் நேற்று மாலை முதல் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
இதனால், ஹௌரா ரயிலின் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏறக் காத்திருந்த தொழிலாளர்களை ரயில்வே காவல்துறையினர் ஒழுங்கப்படுத்தி, வரிசையில் நின்று ரயிலில் ஏறுமாறு அறிவுறுத்தினர்.
தொழிலாளர்கள் பலரும், தங்கள் சொந்த ஊர்களுக்கு மிக மகிழ்ச்சியோடு கிளம்புவதைப் பார்க்க முடிந்தது. பலரும் ஒரு வாரத்துக்கும் மேல் விடுமுறையில் சொந்த ஊர் செல்வதாகவும் கூறுகிறார்கள்.
அங்கே பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினரும், காலையில் கோரமண்டல் விரைவு ரயிலும், மாலையில் ஹௌரா ரயிலும் வழக்கத்தைவிட கூட்டமாகப் புறப்படுவதாகக் கூறுகிறார்கள் அவ்வழியே பயணித்தவர்கள்.
திங்கள்கிழமை முதலே ஏராளமான தொழிலாளர்கள் சென்னையிலிருந்து புறப்படத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Summary
People from Chennai have left for their hometowns in anticipation of the voting.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குனி பெருவிழா: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் - புகைப்படங்கள்

மகாவீா் ஜெயந்தி: 31-இல் இறைச்சிக் கூடங்கள் மூடல்

ராமநவமியை முன்னிட்டு திருத்தேரோட்டம்...

உலகமயமாதலை எதிர்கொள்ளும் தமிழ்ச் சமூகம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


