சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

லஞ்சம் பெற்ற பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கைது

தண்ணீர் குழாய்களை பழுது பார்க்கும் உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம் பெற்ற பேரூராட்சி சுகாதார ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புப் படையினர் கைது செய்தனர்.

Updated On :21 மே 2018, 10:50 pm

தண்ணீர் குழாய்களை பழுது பார்க்கும் உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம் பெற்ற பேரூராட்சி சுகாதார ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புப் படையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், பாங்காரு பேட்டை அமராவதி லேஅவுட்டைச் சேர்ந்தவர் சீனிவாச பிரசாத். இவர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தண்ணீர் குழாய்களை பழுது பார்க்கும் உரிமம் பெற்றிருந்தாராம். இந்நிலையில், உரிமத்தை புதுப்பிக்க பாங்காரு பேட்டை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி, ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக கேட்டாராம். திங்கள்கிழமை ரூ.2,600 முன்பணமாக சுப்பிரமணியிடம் சீனிவாஸ் பிரசாத் வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் படையினர் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுப்பிரமணியிடம் கோலார் லஞ்ச ஒழிப்புப் படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.