தண்ணீர் குழாய்களை பழுது பார்க்கும் உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம் பெற்ற பேரூராட்சி சுகாதார ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புப் படையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், பாங்காரு பேட்டை அமராவதி லேஅவுட்டைச் சேர்ந்தவர் சீனிவாச பிரசாத். இவர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தண்ணீர் குழாய்களை பழுது பார்க்கும் உரிமம் பெற்றிருந்தாராம். இந்நிலையில், உரிமத்தை புதுப்பிக்க பாங்காரு பேட்டை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி, ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக கேட்டாராம். திங்கள்கிழமை ரூ.2,600 முன்பணமாக சுப்பிரமணியிடம் சீனிவாஸ் பிரசாத் வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் படையினர் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுப்பிரமணியிடம் கோலார் லஞ்ச ஒழிப்புப் படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

