மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள 27 பாதுகாப்பு மேலாளர் பணியிடங்கள் குறித்து...

News image

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி - கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 2:08 am

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள 27 பாதுகாப்பு மேலாளர் எம்எம்ஜிஎஸ் II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் மே 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் இதர விவரங்கள்:

பணி: Security Manager

காலியிடங்கள்: 27

சம்பளம்: மாதம் ரூ.64,820 - 93,960

தகுதி: இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் முப்படைகள் ஏதாவதொன்றில் குறைந்தது 5 ஆண்டுகள் அதிகாரியாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது துணை ராணுவப் படையில் குறைந்தது 5 ஆண்டுகள் அதிகாரியாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.4.2026 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர் முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பின்னர் பணி வழங்கப்படும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விவரம் அடங்கிய அட்மிட் கார்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்நாட்டில் தேர்வு நடை பெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், நாகர்கோவில், விருது நகர், திருவண்ணாமலை, ஈரோடு, திருநெல்வேலி .

எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, தொழில்முறை அறிவு பாடப்பிரிவுகளில் இருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்விற்கான பாடத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.100 மட்டும். இதர பிரிவினர்களுக்கு ரூ.850. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.punjabandsind.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.5.2026

விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Punjab and Sind Bank invites applications for the aforesaid post. Before applying,candidates are advised to ensure that they fulfill the stipulated eligibility criteria.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.