சாலையோரம் நின்றிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில், குழந்தை உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், சிரா மற்றும் பட்டநாயக்கனஹள்ளியைச் சேர்ந்தவர்கள், கடந்த 19-ஆம் தேதி தனியார் பேருந்தில் சிகந்தூர் செளடேஸ்வரிதேவி திருவிழாவுக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றிந்த லாரி மீது மோதியது. இதில் 1 வயது குழந்தை உள்பட அனுஷா (7), ரத்னம்மா (38), சவிதா (21), சுமலதா (21), கிரிஜம்மா (50), சங்கர் (35), அஸ்வத்நாராயணா (40) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10 பேர், லேசான காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்காக தும்கூரு, சிரா, பெங்களூரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திவ்யா கோபிநாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷோபாராணி உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து சிரா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிலிண்டர் விலை உயர்வு! முதுகில் குத்தும் பாஜக: டி.கே. சிவக்குமார்

NDA கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும்! அமைச்சர் எல். முருகன் நம்பிக்கை! | BJP

இது தெரியுமா? யானைகளுக்கு மட்டும் பெரிய காதுகள் இருப்பது ஏன்?

ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! பெட்ரோல், டீசல் விலையும் உயரும்! ராகுல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

