விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்புத் துறை அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கர்நாடக

Updated On :5 நவம்பர் 2018, 8:12 am IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைத் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடகத்தில் நவ. 6-ஆம் தேதி நரகாசதுர்தசி பண்டிகையும், நவ.8-ஆம் தேதி பலிபாட்யமி மற்றும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக, குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியம்.
பெரியவர்களின் துணையின்றி பட்டாசுகளை வெடிக்க குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. வெட்டவெளியில் பட்டாசு கொளுத்துவது பாதுகாப்பானது.
மத்தாப்புகளை கொளுத்தும்போது உடம்பிலிருந்து தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசுகளை சட்டை அல்லது கால்சட்டை பையில் வைக்கக் கூடாது. பற்றவைத்த பட்டாசுகள் வெடிக்காவிட்டால் அதன் அருகில் சென்று சோதிக்கக் கூடாது. வீண் பெருமைக்காக பட்டாசுகளை கவனக் குறைவாக வெடிக்க வைக்கக் கூடாது. பட்டாசுவெடிக்கும்போது அருகில் தண்ணீரை வைத்துக்கொண்டு, எதேச்சையாக காயம் ஏற்பட்டால் அதன்மீது தண்ணீரை ஊற்ற வேண்டும். சிசுக்கள், முதியோர், நோயாளிகளை கவனத்தில்கொண்டு மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அதிகம் ஒலியெழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.