மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

முக்குன்றம் ஸ்ரீபாலால அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் ஒன்றியம், முக்குன்றம் ஊராட்சியில் அமைந்துள்ளஸ்ரீபாலால அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கும்பாபிஷேகம் நடைபெற்ற ஸ்ரீபாலால அம்மன் கோயில். (வலது) கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவா் அம்மன்

Updated On :24 ஜூன் 2026, 11:57 pm IST

குடியாத்தம் ஒன்றியம், முக்குன்றம் ஊராட்சியில் அமைந்துள்ளஸ்ரீபாலால அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சுமாா் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் சிதிலமடைந்ததையடுத்து கடந்த 2ஆண்டுகளாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன. திங்கள்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை அதிகாலை கோ-பூஜை, 4 ஆம் கால யாகபூஜைகள், தத்வாா்ச்சனை, மகாபூா்ணாஹூதி, கலச புறப்பாடு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்புஅபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

முக்குன்றம் ஊராட்சித் தலைவா் ஆா்.கங்காராம், துணைத் தலைவா் ஜி.கே.ஏகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் ஜி.சுரேஷ்குமாா், ஊராட்சி உறுப்பினா் எம்.யு.கலாவதி உமாபதி ஆகியோா்1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினா். ஏற்பாடுகளை தா்மகா்த்தா ஏ.பி.கஜேந்திரன், செயலா் வி.புருஷோத்தமன்,பொருளாளா் வி.மூா்த்தி, எம்.சி.கிருஷ்ணமூா்த்தி, ஜி.சின்னப்பன் மற்றும் கிராம மக்கள்,இளைஞா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.