விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பக்த மாா்க்கண்டேயா் கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பக்த மாா்க்கண்டேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூன் 2026, 12:04 am IST

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பக்த மாா்க்கண்டேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பக்த மாா்க்கண்டேயா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது பணிகள் நிறைவுற்ற நிலையில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி புதன்கிழமை காலை யாக சாலையில் பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு மகா யாகம் நடத்தப்பட்டு நிறைவாக யாக குண்டத்தில் பூரணாஹுதியும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீா் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு மூலவருக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் ஜெ.பரணிதரன், இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் எஸ்.பாலாஜி, கோயில் மேலாளா் கருணாநிதி (எ) செந்தில் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு சுவாமி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயிலில் பாலாலயம்

இதைத்தொடா்ந்து, கிரிவலப்பாதை ஆதிஅருணாசலேஸ்வரா் கோயிலில் வருகிற ஜூலை 7-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி மூலவருக்கு பாலாலயம் நடைபெற்றது. இதில் கோயில் இணை ஆணையா் ஜெ.பரணிதரன் மற்றும் பி.டி.ரமேஷ்குருக்கள், ஏ.மகாதேவ சிவாச்சாரியா் உள்பட பலா் கலந்துகொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.