வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

விவசாயிகளின் நலன் காக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

விவசாயிகளின் நலன் காக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

Updated On :5 நவம்பர் 2018, 8:10 am IST

விவசாயிகளின் நலன் காக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தின் பெலகாவியைச் சேர்ந்த 180 விவசாயிகள் தனியார் வங்கியில் பயிர்க்கடன் வாங்கியுள்ளனர். கடனை அடைக்காததால் அந்த வங்கி சார்பில் விவசாயிகள் மீது வழக்குத் தொடரப்பட்டு அதில் விவசாயிகளை கைது செய்ய வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் கர்நாடக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெலகாவி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை தொடர்புகொண்ட முதல்வர் குமாரசாமி, விவசாயிகளின் நலன் காக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதேபோன்றதொரு உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள முதல்வர் குமாரசாமி, இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். பயிர்க்கடன் தள்ளுபடிதிட்டத்தின் கீழ் வருகிற விவசாயிகள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.