பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சாலை விபத்துகளில் 6 பேர் சாவு

3 இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 6 பேர்உயிரிழந்துள்ளனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

3 இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 6 பேர்உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் சிரா வட்டம் கரேஜீவனஹள்ளி தரூர் அருகே சாலையோரம் பழுதாகி நின்ற லாரியை, கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணி புதன்கிழமை அதிகாலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அப்போது வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து கிரேன் மீது மோதியுள்ளது. இதில் காரிலிருந்த ஓட்டுநர் வெங்கடேஷ், சிவக்குமார்,  ஹேமந்த் உள்ளிட்ட 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  காயமடைந்த பிரஜ்வல், அசோக், அனில்குமார் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
தும்கூரு மாவட்டம் திப்டூர் ஹுன்சகட்டாவைச் சேர்ந்த சரத் (24). இவர் புதன்கிழமை அதிகாலை வைட்டிசாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது.  இதில் படுகாயமடைந்த சரத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (26).  இவர் புதன்கிழமை காலை தும்கூரு மாவட்டம் திப்டூர் தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க்கில் தனது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோலை நிரப்பிக் கொண்டிருந்தாராம்.  அப்போது வேகமாக வந்த மினி சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.  இதில் படுகாயமடைந்த சந்தோஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.