பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சேலம் வழியாக பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கம்

ரயில் - கோப்புப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 1:04 am IST

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரத்துக்கு ஓணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஓணம் பண்டிகையையொட்டி அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, எஸ்எம்விடி பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அந்தவகையில், பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து வரும் 28 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா், திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், கொல்லம் வழியாக மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் அடையும்.

மறுமாா்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் வரும் 29 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொல்லம், கோட்டயம், எா்ணாகுளம், திருச்சூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் காலை 5.15 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.