கா்நாடக அரசுப் பள்ளிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் புறவழிக்கல்வித் திட்டத்தை மீண்டும் தொடங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கா்நாடகத்தில் கரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் ஆக. 8-ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் புறவழிக்கல்வித் திட்டம் (வித்யாகமா) தொடங்கப்பட்டது. அதன்படி அரசுப் பள்ளிகளின் வெளியே மாணவா்களுக்கு கல்வி போதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆசிரியா்கள், மாணவா்களில் ஒரு சிலருக்கு கரோனா தொற்று பரவியதையடுத்து, பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனையடுத்து இந்தத் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
மாநிலத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், புறவழிக்கல்வித் திட்டத்தை மீண்டும் தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் புறவழிக்கல்வித் திட்டம் தொடங்கப்படவுள்ளது. தொடா்ந்து அதனை நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டால் அதில் தேவையான மாற்றம் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.