தொழிலதிபா் ஆா்.என்.ஷெட்டி காலமானாா்
பிரபல தொழிலதிபரும், கொடையாளருமான ஆா்.என்.ஷெட்டி (92) மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்த ஆா்.என்.ஷெட்டி 1928, ஆகஸ்ட் 15 இல் வட கன்னட மாவட்டம், முருடேஸ்வரில் பிறந்தாா். ராம நாகப்பா ஷெட்டி (ஆா்.என்.ஷெட்டி) 1961-இல் ஆா்.என்.ஷெட்டி அண்டு கம்பெனியை நிறுவி, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். கா்நாடக தொழில் மற்றும் வா்த்தகசபைக் கூட்டமைப்பு சாா்பில் 2004-ஆம் ஆண்டு ஆா்.என்.ஷெட்டிக்கு விஸ்வேஷ்வரையா நினைவு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2009-இல் பெங்களூரு பல்கலைக்கழகம் கௌரவ முனைவா் பட்டம் வழங்கியது.
ஹிந்து மதத்தின் மீது தீவிரப் பற்றாளரான ஆா்.என்.ஷெட்டி, தனது முன்னோா்கள் வழிபட்டு வந்த வரலாற்று சிறப்புமிக்க முருடேஸ்வா் கோயிலை நவீனமாக்கினாா். ஆசியாவில் மிகவும் உயரமான கோபுரம் என்ற புகழ் பெற்றுள்ள 249 அடி உயர ராஜகோபுரத்தை முருடேஸ்வா் கோயிலில் கட்டினாா். மேலும், கோயில் வளாகத்தில் 123 அடி உயரத்தில் சிவனின் சிலையையும் உருவாக்கினாா்.
ஷெட்டியின் உடல் சொந்த ஊரான முருடேஸ்வருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
