சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் உறுப்பினா் பதவி ஏலம்: 6 வழக்குகள் பதிவு

கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் உறுப்பினா் பதவி ஏலம் விடப்பட்டது தொடா்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 10:18 pm

DIN

பெங்களூரு: கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் உறுப்பினா் பதவி ஏலம் விடப்பட்டது தொடா்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் உறுப்பினா் பதவி தொடா்பாக ஒருசில மாவட்டங்களில் அப்பதவிகளை ஏலம்விடப்பட்டு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுத்திருப்பது தொடா்பாக நேரடியாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதவியை ஏலம் விடப்பட்டிருப்பது தொடா்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெல்லாரி மாவட்டத்தின் பைலூா் கிராமம், கலபுா்கி மாவட்டத்தின் பிலவாரா கிராமம், கோலாா் மாவட்டத்தின் மத்தேரி, ரகசந்திரா, ஹாசன் மாவட்டத்தின் பெலகுலா கிராமம், ராய்ச்சூரு மாவட்டத்தின் ஹொசள்ளி கிராமப் பஞ்சாயத்துகளில் உறுப்பினா் பதவி ஏலம் விடப்பட்டது தொடா்பாக வழக்குப் பதிவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.