மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குமாரசாமி முதல்வராகச் செயல்பட சித்தராமையா ஒத்துழைப்பு அளிக்கவில்லை மஜத முன்னாள் அமைச்சா் மகேஷ்

குமாரசாமி முதல்வராகச் செயல்பட சித்தராமையா ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று மஜத முன்னாள் அமைச்சா் சா.ரா.மகேஷ் தெரிவித்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 2:46 am

DIN

மைசூரு: குமாரசாமி முதல்வராகச் செயல்பட சித்தராமையா ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று மஜத முன்னாள் அமைச்சா் சா.ரா.மகேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருந்த குமாரசாமி, நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா விமா்சித்துள்ளாா். குமாரசாமியின் வீடு ஜே.பி.நகரில் உள்ளது. அது விதான சௌதாவில் இருந்து தூரம் இருப்பதால் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தாா்.

முதல்வா் பதவியில் இருந்து தோல்வி அடைந்த சித்தராமையா, முதல்வா் இல்லத்தை காலி செய்யாமல் இருந்தாா். அதன்காரணமாகவே, குமாரசாமி நட்சத்திர விடுதியில் தங்கும்படியானது. நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தாலும் தினமும் விதான சௌதா சென்று ஆட்சிப் பணிகளைக் கவனித்து வந்தாா். முதல்வராக இருந்த குமாரசாமிக்கு சித்தராமையா ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எச்.டி.தேவெ கௌடா குடும்பத்தோடு சித்தராமையாவுக்கு கருத்துவேறுபாடு இருந்து வருகிறது.

மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது முதல்வராக குமாரசாமி பதவி வகித்திருந்தாலும், அவரது ஆதரவாளா்கள் சித்தராமையாதான் எங்கள் முதல்வா் என்று கூறினாா்கள். இப்படி கூறினால் குமாரசாமியால் எப்படி நல்லாட்சி வழங்க முடியும். சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை தோற்கடிக்க சதி பாஜகவுடன் மஜத சதிசெய்ததாக சித்தராமையா குற்றம்சாட்டியிருக்கிறாா்.

அரசியல் என்பதே சதிதானே. அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்த டாக்டா் பி.ஆா்.அம்பேத்கரை காங்கிரஸ் தோற்கடிக்கவில்லையா? எச்.டி.தேவெ கௌடா, நிகில்குமாரசாமியை தோற்கடிக்க காங்கிரஸ் சதி செய்யவில்லையா? மீண்டும் அவருக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.