சஞ்சு சாம்சன் கடவுளுக்குப் பிடித்தமான குழந்தை..! சிராஜ் புகழாரம்!
டி20 உலகக் கோப்பையில் அசத்திய சஞ்சு சாம்சன் குறித்து முகமது சிராஜ் பேசியிருப்பதாவது...


டி20 உலகக் கோப்பையில் அசத்திய சஞ்சு சாம்சன், “கடவுளுக்கு மிகவும் பிடித்த குழந்தை” என சக இந்திய வீரர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.
மெய்நிகர் காலிறுதி (சூப்பர் 8 கடைசி ஆட்டம்), அரையிறுதி, இறுதிப் போட்டி என மூன்றிலும் ஆட்ட நாயகன் விருது வெல்லும் அளவுக்கு சஞ்சு சாம்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார்.
சஞ்சு சாம்சன் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் 97, அரையிறுதியில் 89, இறுதிப் போட்டியில் 89 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் காரணமாக, சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதும் வென்றார்.
இந்திய வீரர்களுக்கான நமன் விருதில் பங்கேற்ற முகமது சிராஜ் சஞ்சு சாம்சன் குறித்து பேசியிருப்பதாவது:
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடிய விதம் மிகவும் முக்கியமானது. பிளேயிங் லெவனில் இல்லாமல் இருந்து, முக்கியமான மூன்று நாக் அவுட் சுற்றில் க்ளட்ச் (அழுத்தமான சூழ்நிலையில் சிறப்பாக) செயல்பாடுகளை வழங்கி அசத்தினார். அவர் கடவுளுக்கு மிகவும் பிடித்தமான குழந்தை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...