உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அர்ஷ்தீப் சிங் செய்த தவறுக்காக நியூசிலாந்து வீரரிடம் மன்னிப்பு கேட்ட இந்திய கேப்டன்!

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் நியூசிலாந்து வீரரிடம் மன்னிப்பு கேட்டது குறித்து...

India's captain Suryakumar Yadav, right, talks to New Zealand's Daryl Mitchell, who is annoyed after a misguided throw from India's Arshdeep Singh hit his bat during the T20 World Cup cricket final match between India and New Zealand in Ahmedabad, India, Sunday, March 8, 2026. (AP Photo/Ajit Solanki)

நியூசிலாந்து வீரரிடம் மன்னிப்பு கேட்ட இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ். - படம்: ஏபி

Published On :

அர்ஷ்தீப் சிங் செய்த தவறுக்காக இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் இடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பந்தினால் அடித்தது சர்ச்சையானது.

இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் டேரில் மிட்செல் விளையாடிய பந்து மீண்டும் அவரிடமே சென்றது. அந்தப் பந்தைப் பிடித்த அர்ஷ்தீப் சிங், பேட்டர் டேரில் மிட்செல் மீது எறிவார்.

இந்த சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்ஷ்தீப் சிங்கிற்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதத்தை அபராதமாகவும் ஒரு தகுதி இழப்புப் புள்ளியையும் ஐசிசி விதித்தது.

இந்தச் சம்பவத்தின் போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டேரில் மிட்செல் அருகில் சென்று விளக்கம் அளிப்பார். தற்போது இது குறித்து பிடிஐக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது:

சில நேரங்களில் போட்டியின் உக்கிரத்தில் இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்துவிடும். அப்போது என்ன நடந்தது என்பதை நம்மால் முழுவதுமாகப் புரிந்துக்கொள்ள முடியாது. ஆனால், அதன்பிறகு நான் அர்ஷ்தீப் சிங்கிடம் இப்படி நடந்திருக்கக் கூடாது என்று பேசினேன்.

அதன்பிறகு, டேரில் மிட்செல் இடம் அர்ஷ்தீப் சிங் சென்று பேசினார். அதன்பிறகு அது இலகுவான ஒன்றாக மாறிவிட்டது. அதை அவர் மிகவும் தன்னம்பிக்கையுடன் எடுத்துக்கொண்டார்.

களத்தில் தலைவனாக நான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன். அதனால்தான், நானே மிட்செல் இடம் சென்று பேசினேன். அது மிகவும் முக்கியம் என நான் நினைக்கிறேன். அர்ஷ்தீப் வேண்டுமென்றே செய்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.