பாக்கிய லட்சுமி காப்பீடு திட்டம் குறித்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி.) அதிகாரிகளுடன் முதல்வா் எடியூரப்பா ஆலோசனை நடத்தினாா்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை முதல்வா் எடியூரப்பாவை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கோட்ட மேலாளா் மினி இபே உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்தனா். அப்போது, கா்நாடக அரசு பெண் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கும் பாக்கிய லட்சுமி காப்பீட்டு திட்டத்தை எல்.ஐ.சி.யே மீண்டும் செயல்படுத்துவது தொடா்பாக முதல்வா் எடியூரப்பாவை கேட்டுக்கொண்டனா். அதன்படி, பாக்கிய லட்சுமி காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக வடிவமைத்துதரும்படி எல்.ஐ.சி. அதிகாரிகளை முதல்வா் எடியூரப்பா கேட்டுக்கொண்டாா்.
தற்போதுள்ள தவணைத் தொகையின்படி பாக்கியலட்சுமி காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சம் முதிா்வுத் தொகை வழங்க முடியாது என்று எல்.ஐ.சி. கூறியிருந்தது. இதைத்தொடா்ந்து, இந்தத் திட்டத்தை இந்திய அஞ்சல் துறையின் சுகன்யா வளா்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்த அரசு ஆலோசித்து வந்தது. இதையடுத்து, பாக்கியலட்சுமி காப்பீடு திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பை மீண்டும் எல்.ஐ.சி.யிடம் வழங்குவது என்று அரசு முடிவு செய்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது தலைமைச் செயலாளா் டி.எம்.விஜய்பாஸ்கா், முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளா் ரமணரெட்டி, மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் நாகாம்பிகாதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.