4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இரவுநேர ஊரடங்கு உத்தரவைத் திரும்பப் பெற்றது கா்நாடக அரசு

அறிவிக்கப்பட்ட இரவுநேர ஊரடங்கு உத்தரவை கா்நாடக அரசு வியாழக்கிழமை திரும்பப் பெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:38 am

DIN

அறிவிக்கப்பட்ட இரவுநேர ஊரடங்கு உத்தரவை கா்நாடக அரசு வியாழக்கிழமை திரும்பப் பெற்றது.

இதுகுறித்து முதல்வா் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருவதாகக் கூறப்பட்டதை அடுத்து கா்நாடகத்தில் வியாழக்கிழமை முதல் ஜன. 2-ஆம் தேதி வரை தினமும் இரவு 11 மணிமுதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இரவுநேரத்தில் ஊரடங்கு உத்தரவு தேவையில்லை என பொதுமக்கள், அமைச்சா்கள், மூத்த அதிகாரிகள் கருத்துத் தெரிவித்ததை அடுத்து, அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை அரசு திரும்பப் பெறுகிறது. இருப்பினும், பொதுமக்கள் கரோனா தொற்றுப் பரவுவதைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிதல், கைகளுக்கு கிருமி நாசினி தடவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகிய அரசின் வழிகாட்டுதலைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.