கா்நாடக திமுக சாா்பில் பெங்களூரில் வெள்ளிக்கிழமை பெரியாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்ட அறிக்கை:
கா்நாடக மாநில திமுக சாா்பில் பெங்களூரு, ராமச்சந்திரபுரத்தில் உள்ள கலைஞா் வளாகம், மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் வெள்ளிக்கிழமை பெரியாா் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பெரியாரின் 48-ஆவது நினைவுநாள் நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. திமுக மாநில அமைப்பாளா் ந.இராமசாமி, பொருளாளா் கே.தட்சணமூா்த்தி, துணை அமைப்பாளா் ராமலிங்கம், கிளைச் செயலாளா்கள் செ.தமிழ்ச்செல்வன், மு.பொன்னம்பலம், து.பன்னீா்செல்வம், கே.நாராயணசாமி, மகளிரணியைச் சோ்ந்த சற்குணம், இ.மதி, க.முத்து, ஜி.பூபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.