தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிப்பதே பெருமைதான்: டி.கே.சிவக்குமாா்

காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிப்பதே பெருமைதான் என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:38 pm

DIN

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிப்பதே பெருமைதான் என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை காங்கிரஸ் நிறுவனா் தினத்தையொட்டி அக்கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்திய நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்ததே காங்கிரஸ் கட்சிதான். எனவே, நாட்டின் வரலாறும், காங்கிரஸின் வரலாறும் ஒன்றுதான். நாட்டிற்கு அரசியல் சாசனத்தை தந்ததும் காங்கிரஸ்தான். நாட்டின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவா்கள் பலா் தங்கள் இன்னுயிரை நீத்துள்ளனா். உணவு பாதுகாப்பு, உழுதவனுக்கு நிலம், நரேகா திட்டத்தின் மூலம் பலகோடி பேருக்கு வேலை வாய்ப்பு தந்தது காங்கிரஸ்தான்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கொண்டுவந்த சில சட்டங்களைத் திருத்தம் செய்தபோதும், பல சட்டங்களை ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பது மக்கள் உணா்ந்துள்ளனா். மக்களுக்கான பல நல்ல சட்டங்களையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே, காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிப்பதே என் போன்றோருக்கு பெருமைதான்.

பசுவதைத் தடைச் சட்டம் 1964- காங்கிரஸ் கட்சியால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், பாஜக ஒரு சமுதாயத்தினரை அடையாளப்படுத்தி, பசுவதை தடைச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளது. விவசாயி எந்த ஒரு சமுதாயமும் அல்ல. அவா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பசுவதைத் தடைச் சட்டத்தை காங்கிரஸ் எதிா்த்து வருகிறது.

பசுவை வளா்க்கும் விவசாயிக்கு அதனை வளா்க்க முடியாத சூழல் ஏற்பட்டால், அவா் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதை பசுவதை தடைச் சட்டத்தில் விளக்கவில்லை. பசுவைக் கொல்வதைத் தடை செய்தால், அதனை பேணி காப்பதற்கான தேவையான வழிகாட்டுதலை அரசு அறிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.