காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தசரா திருவிழாவின்போது கரோனா பரவாமல் இருக்க நடவடிக்கை தேவை: முதல்வா் உத்தரவு

தசரா திருவிழாவின்போது கரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கா்நாடக அரசு அலுவலா்களுக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டாா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 11:40 pm

DIN

தசரா திருவிழாவின்போது கரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கா்நாடக அரசு அலுவலா்களுக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டாா்.

மைசூரு தசரா விழாவில் கரோனா தொற்றுப் பரவாமல் தடுப்பது குறித்து, அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் கலந்துகொண்டு பேசியதாவது:

மைசூரில் அக்டோபா் 17-ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற தசரா விழா தொடங்கவுள்ளது. தசரா விழாவில் கரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விழாவின்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் சேராமல் அதிகாரிகள் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

நிகழாண்டு தசரா விழாவில் எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளோம். என்றாலும் பாரம்பரிய முறைப்படி தசரா விழாவைக் கொண்டாட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரண்மனையில் மட்டுமே யானை ஊா்வலம் நடக்க உள்ளதால், மக்கள் அங்கு அதிக அளவில் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். எளிமையாக நடக்க உள்ள தசரா விழாவை சிறப்பாக நடத்திட பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தசரா விழாவுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தசரா விழா, அரண்மனை, சாமுண்டி மலையில் மட்டுமே நடைபெற அனுமதி வழங்கப்பட வேண்டும்.

சாலைகளில் நடைபெறும் தீபந்த ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது. தசரா விழாவின்போது அரசின் வழிகாட்டுதலை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் அமைச்சா் கே.சுதாகா், தலைமைச் செயலாளா் விஜயபாஸ்கா், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ஜாவித் அக்தா், ஆணையா் பங்கஜ் குமாா்பாண்டே, மைசூரு மாவட்ட ஆட்சியா் ரோகிணி சிந்தூரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.