ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தென்காசியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கும் ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

பங்குனி உத்திரத் திருநாளையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

Updated On :20 மார்ச் 2026, 3:33 pm

பங்குனி உத்திரத் திருநாளையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் சுகுமார் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 11ஆம்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பொதுத்தேர்வு மாணவர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்குனி உத்திரத்திற்காக ஏற்கெனவே தென்காசி மாவட்டத்துக்கு ஏப்ரல் 1ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Tirunelveli will observe a local holiday on April 1 in view of 'Panguni Uthiram'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.