காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை

தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து குழந்தையைக் கொன்று தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 11:36 pm

DIN

தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து குழந்தையைக் கொன்று தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தென் கன்னட மாவட்டம், மங்களூரு சக்திநகரைச் சோ்ந்தவா் பிரமிளா (38). தனது 2 பெண் குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்த இவா், சனிக்கிழமை இரவு தனது தாய் உள்பட 2 பெண் குழந்தைகளுக்கு தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

தூக்கமாத்திரை கலந்த தேநீரைக் குடித்த 10 மாத குழந்தை இஷானி தூக்கத்திலேயே உயிரிழந்தது. பிரமிளாவின் மற்றொரு குழந்தையும், அவரது தாயாரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து கங்கநாடி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.