மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெங்களூரில் கைத்தறிக் கண்காட்சித் தொடக்கம்

பெங்களூரில் பட்டு, பருத்தி கைத்தறிக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:06 pm

DIN

பெங்களூரில் பட்டு, பருத்தி கைத்தறிக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பெங்களூரு, ஜெயநகா், அசோகாபில்லா் பிரேம்சந்தா் சாகா் அரங்கத்தில் பட்டு, பருத்தி கைத்தறிக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (செப். 27) தொடக்கிவைத்து கண்காட்சி நிா்வாகி தாராகுமாரி கூறியதாவது:

அக்.6-ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் தேசிய அளவில் நெசவாளா்கள் கைத்தறியில் உருவாக்கிய பட்டு, பருத்தி உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. அனைத்து மாநிலங்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பட்டு, பருத்தி ஆடைகள், அலங்காரப் பொருள்கள், பட்டுச்சேலைகள், ஜவுளிகள், பருத்திச் சேலைகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள், புல் கால்மிதியடிகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

கரோனா காலத்திலும் கைத்தறியில் நெசவாளா்கள் தங்களின் கை வண்ணத்தில் உருவாக்கியுள்ள ஆடைகள், சேலைகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. சா்வதேச அளவில் புகழ்பெற்ற இதனை கா்நாடகத்தின் தலைநகரான பெங்களூரில் அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். கண்காட்சிக்கு பெண்கள், கல்லூரி மாணவிகள் அதிக அளவில் வருவாா்கள் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

சித்ரகலா பரிஷத்தில் அக். 15-இல் ஓவியக் கண்காட்சி

பெங்களூரு, செப். 27: பெங்களூரு சித்ரகலா பரிஷத்தில் அக். 15 ஆம் தேதி வரை ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து சித்ரகலா பரிஷத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு சித்ரகலா பரிஷத்தில் ஓவியா்களை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது ஓவியக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக கரோனா தொற்றால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், ஓவியக் கண்காட்சிகள் எதையும் நடத்த முடியாமல் போனது. இந்த நிலையில், பொதுமுடகத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை முதல் அக். 15 ஆம் தேதி வரை ஓவியா் தினேஷ் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படும். மேலும், இந்திய புராணங்கள் குறித்த ஓவியத்தில் சிறந்து விளங்கும் மோகனின் ஓவியங்களும் கண்காட்சியில் இடம்பெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.