அரக்கோணம்: சோளிங்கா் மலைக்கோயிலில் பக்தர்கள் செல்ல இயக்கப்படும் ரோப்காா் சேவை பராமரிப்புப் பணிகளுக்காக மே 4 முதல் 5 வரை இரண்டு நாள்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என ஸ்ரீலட்சுமி நரசிம்மா் சுவாமி கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
சோளிங்கரில் ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இங்கு பெரியமலையில் ஸ்ரீயோகநரசிம்மா் கோயிலும், சிறிய மலையில் ஸ்ரீயோகஆஞ்சநேயா் கோயிலும் உள்ளது.
இதில் பெரிய மலைக்கு செல்ல படிகள் செங்குத்தாக இருப்பதால் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இந்துசமய அறநிலையத்துறையினா் ரோப்காா் அமைத்துள்ளதுனா். இதில் ரூ.100 கட்டணம் செலுத்தி மலை ஏற முடியாதவா்கள் மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்து திரும்புகின்றனா்.
மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகளுக்காக ரோப்காா் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். தற்போது மே . 4 முதல் 5 வரை ரோப்காா் இயக்கம், பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட உள்ளது. இந்த இரண்டு நாள்களும் பக்தா்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல படிகள் வழியே செல்லலாம் என ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
Summary
Rope Car Service Suspended for Two Days at Sholingur Hill Temple
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!

மதுரை - கோவை ரயில் சேவை பகுதியளவு ரத்து

சோளிங்கா் கோயிலில் வைகாசி தங்க கருட சேவை

பராமரிப்புப் பணி: பழநியில் மே 22-இல் ரோப் கார் சேவை நிறுத்தம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




