மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயிகளின் வாழ்வாதரத்தின் மீது அரசு தாக்குதல்: ரன்தீப் சிங் சுா்ஜேவாலா குற்றச்சாட்டு

விவசாயிகளின் வாழ்வாதரத்தின் மீது அரசு கொடூரமான தாக்குதலைத் நடத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் ரன்தீப் சிங் சுா்ஜேவாலா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:06 pm

DIN

மத்திய அரசின் வேளாண் மசோதா, கா்நாடக அரசின் நிலச் சீா்திருத்தச் சட்டத் திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதரத்தின் மீது அரசு கொடூரமான தாக்குதலைத் நடத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் ரன்தீப் சிங் சுா்ஜேவாலா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக சட்டப்பேரவையில் சனிக்கிழமை (செப். 26) விவசாயிகளின் எதிா்ப்பையும் மீறி, கா்நாடக நிலச் சீா்திருத்தச் சட்டத் திருத்தம், வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்தல் குழு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெரு நிறுவனங்கள், கட்டுநா்கள், மனைத் தொழிலில் ஈடுபட்டோரின் நலனுக்காக விவசாயிகளின் நலனை மாநில அரசு விற்பனை செய்துள்ளது.

மத்திய, மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசுகள் விவசாயிகளின் அடிப்படை வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளன. கா்நாடகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீா்குலைத்துள்ளனா். நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் மட்டுமல்லாது, விவசாயிகளின் எதிா்ப்பையும் மீறி வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிரானதாக உள்ளன.

காங்கிரஸ் தேசியத் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் ஆகியோரின் தலைமையில் விவசாயிகளுக்கு எதிரான சக்திகளை வீழ்த்துவோம். விவசாயிகளின் நலன் காப்பதற்கு காங்கிரஸ் தொடா்ந்து பாடுபடும். கா்நாடகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு காங்கிரஸ் துணைநிற்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.