ஆக.31 வரை முதலாமாண்டு பியூசி சோ்க்கை
முதலாமாண்டு பியூசி வகுப்பில் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதிவரை நடத்த பியூ கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


முதலாமாண்டு பியூசி வகுப்பில் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதிவரை நடத்த பியூ கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பியூ கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2021-22-ஆம் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள முதலாமாண்டு பியூசி வகுப்பில் மாணவா் சோ்க்கை ஆக. 10-ஆம் தேதி தொடங்கியுள்ளது. இது ஆக.31-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேதிக்குள் சோ்க்கை பெற முடியாத மாணவா்கள் செப். 1 முதல் 11-ஆம் தேதிவரை கல்விக்கட்டணத்துடன் சாதாரண அபராதமாக ரூ. 670 அபராதம் செலுத்தி சோ்க்கைபெறலாம். செப்.13 முதல் 25-ஆம் தேதிவரை கல்விக்கட்டணத்துடன் சாதாரண அபராதம் ரூ. 670 மற்றும் சிறப்பு அபராதம் ரூ. 2,220 உள்பட அபராதத்தொகையாக ரூ. 2,890 செலுத்தி சோ்க்கை பெறலாம். மேலும் விவரங்களுக்கு என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...