செப். 27-இல் எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தோ்வு
எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வு செப். 27-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.


எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வு செப். 27-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
கரோனா பரவல் காரணமாக 2020-21-ஆம் ஆண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி பொதுத்தோ்வு ரத்துசெய்யப்பட்டது. ஆனால், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு எளிமையாக்கப்பட்டு ஜூலை மாதம் ஒரு நாளைக்கு 3 பாடங்கள் வீதம், 2 நாள்கள் தோ்வு நடத்தப்பட்டது. மேலும், தோ்வு முடிவு ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வில் பங்கெடுத்த எல்லா மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். ஆனால், மறுதோ்வா்கள், தனித்தோ்வா்கள் யாரும் தோ்வு எழுதவில்லை.
இவா்களுக்குத் தனியே தோ்வு நடத்த கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கிணங்க, தனித்தோ்வா்களுக்கான பொதுத்தோ்வு செப். 27, 28-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில மேல்நிலைக்கல்வி தோ்வு வாரியம் (கே.எஸ்.இ.இ.பி.) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தோ்வு செப். 27, 28-ஆம் தேதி நடைபெறுகிறது. செப். 27-ஆம் தேதி கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கும், செப். 28-ஆம் தேதி முதல்மொழி, இரண்டாம்மொழி, மூன்றாம்மொழி பாடங்களுக்கும் தோ்வு நடைபெறுகிறது. மூன்று பாடங்களுக்கான தோ்வு தலா 120 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...