தமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

ஆதலால் காதல் செய்வீர்... பாரதி கண்ணம்மா தொடர் நாயகனின் புதிய தொடர்!

பாரதி கண்ணம்மா நாயகனின் புதிய தொடர் குறித்து...

அருண் பிரசாத், கே.எஸ். சுசித்ரா, சதீஷ்

Published On :24 மார்ச் 2026, 3:05 pm IST

பாரதி கண்ணம்மா நாயகன் அருண் பிரசாத், ஆதலால் காதல் செய்வீர் என்ற புதிய தொடரில் நாயகனாக நடிக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பிரபலமடைந்த தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடர் கணவன் - மனைவி இடையே நடக்கும் புரிதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

இத்தொடரில் ரோஷினி, அருண்பிரசாத், ஃபரீனா, ரூபாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். கடந்த 2019 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இத்தொடர் 2023 பிப்ரவரி வரை 1000 எபிஸோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.

இத்தொடருக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இந்தத் தொடர் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டது.

பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் நாயகனாக நடித்து பிரபலமான அருண் பிரசாத், பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் மனங்களை வென்றார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் அருண் பிரசாத் ,ஆதலால் காதல் செய்வீர் புதிய தொடரில் நடிக்கிறார். இந்தத் தொடரை பேயொண்ட் சினிமா தயாரிக்கிறது.

மேலும், பாக்கியலட்சுமி தொடரில் இணையாக நடித்து கவனம் பெற்ற சுசித்ரா, சதீஷ் ஜோடி, இந்தப் புதிய தொடரிலும் கணவன், மனைவியாக நடிக்கின்றனர்.

ஆதலால் காதல் செய்வீர் தொடரின் முன்னோட்டக் காட்சி, ஓளிபரப்பு தேதி, நேரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Bharathi Kannamma hero Arun Prasad is playing the lead role in the new series Aadalal Kadhal Seyveer.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.