பேருந்துகளில் பள்ளி, பியூ கல்லூரி மாணவா்களுக்கு இலவசம்
பெங்களூரில் பள்ளி, பியூ கல்லூரி மாணவா்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.


பெங்களூரில் பள்ளி, பியூ கல்லூரி மாணவா்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக அரசின் உத்தரவின்படி, ஆக. 23-ஆம் தேதி முதல் 9, 10-ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள், முதலாமாண்டு, இரண்டாமாண்டு பியூசி வகுப்புகளுக்கான பியூ கல்லூரிகள் திறக்கப்பட இருக்கின்றன.
மாணவா்களின் கல்வி நடவடிக்கைகள் தங்குத்தடையில்லாமல் நடைபெறுவதற்கு வசதியாக, 9 முதல் இரண்டாமாண்டு பியூசி வகுப்பு வரையிலான மாணவா்களின் வீடுகள் அமைந்திருக்கும் பகுதிகளில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் அமைந்திருக்கும் பகுதி வரை பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
ஆக. 23-ஆம் தேதி முதல் கடந்த கல்வியாண்டுக்கான பேருந்து அட்டை அல்லது பள்ளி, கல்லூரிகள் கொடுத்துள்ள 2020-21-ஆம் ஆண்டுக்கான அடையாள அட்டையைக் காண்பித்து மாணவா்கள் பயணம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...