ஹௌரா நகரில் மார்ச் 26 அன்று ராம நவமி ஊர்வலம் நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஹௌரா நகரில் லாப நோக்கற்ற அமைப்பு ஒன்று ராம நவமி ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி கோரியது. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அமைப்பு சார்பில் மனுதாரர் அஞ்சனி புத்ர சேனா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மேற்கு வங்க தலைமை வழக்குரைஞர் கிஷோர் தத்தா, இந்த அமைப்பு கடந்த 25 ஆண்டுகளாக ராமநவமி ஊர்வலங்களை நடத்தி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அஞ்சனி புத்ர சேனா சார்பில் நடத்தப்படும் ஊர்வலத்தைக் காலை நேரத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரினார்.
முன்னதாக, மார்ச் 20 அன்று அதே இடத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ராமநவமி ஊர்வலத்தை மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே, விஷ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், மார்ச் 26 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஊர்வலம் நடத்த அந்த அமைப்பிற்கு நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா அனுமதி அளித்தார்.
அதேசயமம், நிபந்தனைகளின்படி, ஊர்வலத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டக்கூடாது என்றும், ஊர்வலத்தின்போது எந்தவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது.
ஊர்வலத்தில், அலங்கார ஊர்தி மற்றும் ஸ்ரீராமரின் திருவுருவச் சிலையை ஏற்றிச் செல்ல ஒரேயொரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் கொடிகள், அடையாளங்களை பிவிசி பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Summary
The Calcutta High Court on Tuesday allowed a Ram Navami procession by an organisation in Howrah on March 26 but imposed strict restrictions on carrying weapons.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!

தெரு நாய்கள் பிரச்னை! தமிழ்நாடு, புதுவை அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீதித் துறை வரலாற்றில் புதிய சாதனை: ஒரே நேரத்தில் 4 பெண் தலைமை நீதிபதிகள்
உதயநிதி வேட்புமனு ஏற்பு: ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



