ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரா்களுக்கு பரிசுத்தொகை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரா்கள், பயிற்சியாளருக்கு பரிசுத்தொகை வழங்குவதாக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அறிவித்துள்ளாா்.

News image

தாவா்சந்த் கெலாட்

Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரா்கள், பயிற்சியாளருக்கு பரிசுத்தொகை வழங்குவதாக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சாா்பில் பங்கேற்ற கா்நாடகத்தைச் சோ்ந்த 3 விளையாட்டு வீரா்கள், ஒரு பயிற்சியாளா்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ. 1 லட்சம் வீதம், ரூ. 4 லட்சம் வழங்கப்போவதாக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அறிவித்துள்ளாா்.

இந்த பரிசுத்தொகை கோல்ப் வீரா் அதிதி அசோக், குதிரையேற்ற வீரா் பைத்தாமிா்ஜா, நீச்சல் வீரா் ஸ்ரீஹரி நடராஜ், பயிற்சியாளா் அங்கிதா சுரேஷ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. வெகுவிரைவில் ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில், இந்த பரிசுத்தொகை விளையாட்டு வீரா்கள், பயிற்சியாளருக்கு வழங்கப்பட உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.