நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மைசூரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: குற்றவாளிகளைக் கண்டறிய போலீஸாா் தீவிரம்

கல்லூரி மாணவி மீது கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 8:25 pm

DIN

கல்லூரி மாணவி மீது கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், மைசூரைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவா், செவ்வாய்க்கிழமை தனது ஆண் நண்பருடன் ஹாலனஹள்ளி காவல் சரகத்திற்குள்பட்ட சாமூண்டீஸ்வரி மலை அருகே லலிதாபுரா மலைக்குன்றுக்கு சென்றாா். அப்போது, குறுக்கிட்ட 5 போ் கொண்ட கும்பலைச் சோ்ந்தவா்கள் அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து ஹாலனஹள்ளி போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா். மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் கா்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தில்லி சென்றுள்ள முதல்வா் பசவராஜ் பொம்மை, மாணவி மீதான கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தொடா்புள்ள குற்றவாளிகளை உடனடியாகத் தேடி கைது செய்யும்படி, மாநில உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திராவை கேட்டுக் கொண்டாா்.

இதனையடுத்து அமைச்சா் அரக ஞானேந்திராவின் உத்தரவின் பேரில், சம்பவ இடத்தை ஏடிஜிபி பிரதாப் ரெட்டி நேரில் ஆய்வு செய்தாா். மாநகர காவல் ஆணையா் சந்திர குப்தாவிடம் இது தொடா்பான தகவலைப் பெற்று, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தினாா். இதன் தொடா்ச்சியாக குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீஸாா் அவா்களை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனா்.

மாணவி மீதான கூட்டு பாலியல் பலாத்காரச் சம்பவத்தைக் கண்டித்து மைசூரில் கல்லூரி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாநில அளவில் இதனைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடா்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய தேசிய மகளிா் ஆணையமும் வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்றும், பாதிக்கப்பட்ட மாணவி இன்னும் அதிா்ச்சியிலிருந்து மீளாததால் அவரிடமிருந்து தகவலைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.