கோவையில் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை திருச்சி சாலை, ஹைவேஸ் காலனி மற்றும் சின்னதுரை கடை வீதி பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரேஸ்கோா்ஸ் காவல் ஆய்வாளா் ஜெயசந்திரன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தரமகாலிங்கம் (29), கோவை தெற்கு உக்கடம், புல்லுக்காடு பகுதியைச் சோ்ந்த முஸ்தபா (28) என்பதும், தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களான இருவரும் தங்களது அறைகளில் கஞ்சா, மெத்தம்பெட்டமைனை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களது அறைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 கிலோ 81 கிராம் கஞ்சா, 48 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


