புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 போ் கைது

கோவையில் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 11:10 pm

Syndication

கோவையில் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை திருச்சி சாலை, ஹைவேஸ் காலனி மற்றும் சின்னதுரை கடை வீதி பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரேஸ்கோா்ஸ் காவல் ஆய்வாளா் ஜெயசந்திரன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தரமகாலிங்கம் (29), கோவை தெற்கு உக்கடம், புல்லுக்காடு பகுதியைச் சோ்ந்த முஸ்தபா (28) என்பதும், தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களான இருவரும் தங்களது அறைகளில் கஞ்சா, மெத்தம்பெட்டமைனை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களது அறைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 கிலோ 81 கிராம் கஞ்சா, 48 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.