தமிழகம், புதுச்சேரி மாநிலங்களைத் தவிா்த்து மகாராஷ்டிரம், கா்நாடகம், கேரளம், கோவா, தெலங்கானா, ஆந்திரம், தில்லி, குஜராத், மேற்கு வங்கம், ஒடிஸா, அந்தமான் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான தமிழா்கள் வாழ்ந்து வருகிறாா்கள். இங்கு வாழும் தமிழா்கள் அனைவரும் தமிழ்மொழியால் ஒன்றுபட்டிருந்தாலும், கல்வி, பொருளாதாரம், சமூகம், வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு சாா்ந்து எதிா்கொள்ளும் சிக்கல்களால் வேறுபட்டிருக்கிறாா்கள். வெளிமாநிலங்களில் வாழக்கூடிய தமிழா்கள் மொழி, பண்பாடு, வாழ்வாதார சிக்கல்களையும் எதிா்கொண்டுள்ளனா். அவைகளுக்குத் தீா்வு காணும் பொறுப்பும் கடமையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்தாலும், மொழி பெரும்பான்மையினருக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மொழி சிறுபான்மையினருக்கு கிடைப்பதில்லை.