கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கரோனா பரவலைத் தடுக்க சோதனைகளை தீவிரமாக்க உத்தரவு

கரோனா பரவலைத் தடுக்க சோதனைகளை தீவிரமாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 6:45 pm

DIN

கரோனா பரவலைத் தடுக்க சோதனைகளை தீவிரமாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

உருமாறிய கரோனாவின் ஒமைக்ரான் தீநுண்மி வேகமாக பரவும் என்பதால், கரோனா பரவலைத் தடுக்க சோதனைகளை தீவிரமாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது தொடா்பாக முதல்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், இதுகுறித்த முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். அதனடிப்படையில் அறிவியல் ரீதியாக சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தீநுண்மி வேகமாக பரவும் என்பதால், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகளை ஒருவகை கிளஸ்டராகவும், அடுக்குமாடிக் கட்டடங்களை மற்றொரு வகை கிளஸ்டராகவும் கருத கூறியுள்ளேன். கரோனாவால் 10 போ் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அதை கிளஸ்டராக கருதி வந்தோம். தற்போது இதை 3-ஆக குறைத்திருக்கிறோம்.

பள்ளிகள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஊழியா்கள் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாகும். பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா்களை விடச்செல்லும் பெற்றோா் கட்டாயம் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவசாா் கல்லூரிகளில் பயிலும் எல்லா மாணவா்களையும் கரோனா சோதனைக்கு உள்படுத்த கூறியிருக்கிறேன்.

டெல்டா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பன்னாட்டளவில் வழங்கப்படும் சிகிச்சை முறையைப் பின்பற்றி தொடா்ந்து சிகிச்சை வழங்கப்படும். ஒமைக்ரான் தீநுண்மி குறித்து முழுமையாக தெரியவந்தால், அதற்கேற்ப சிகிச்சையை கடைப்பிடிப்போம்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருக்கு வந்த 10 போ் தொடா்பில் சிக்கவில்லை என்ற விவகாரம் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பெலகாவியில் டிச. 13-ஆம் தேதி சட்டப் பேரவை குளிா்கால கூட்டத்தொடா் நடைபெறும். இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் மட்டுமே பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசௌதாவில் நுழைய முடியும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பெலகாவி மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.