ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஊராட்சியில் ஆவணங்களை திருடியதாக முன்னாள் ஊராட்சிச் செயலா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் வன்னியம்பட்டி போலீஸில் புகாா் மனு அளித்தாா். அந்த மனுவில் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 2 காந்தி ஜெயந்தி அன்று பிள்ளையாா்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பணி மாறுதல் உத்தரவை செயல்படுத்தாதது குறித்த கேள்வி எழுப்பிய விவசாயி அம்மையப்பனை தாக்கியதால் ஊராட்சித் செயலா் தங்கபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், தங்கபாண்டியன் பொறுப்பில் இருந்த கிராம சபை புத்தகங்கள், செலவின சீட்டு விவரங்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், காசோலைகள் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணை செய்த போது, தங்கபாண்டியன் கையாடல், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதால் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை திருடி சென்று விட்டாதால், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, தங்கப்பாண்டியன் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து வன்னியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே தங்கபாண்டியன், அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சோ்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

ஊழல் வழக்கு: ஹரியாணா முன்னாள் அமைச்சா் உள்பட 5 போ் மீது வழக்கு பதிவு

வாக்குச் சாவடிக்குள் விடியோ எடுத்த பெண் மீது வழக்கு
விவாகரத்துக் கோரும் நடைமுறை, ஆவணங்கள் என்னென்ன?

தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

