ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வாக்குச் சாவடிக்குள் விடியோ எடுத்த பெண் மீது வழக்கு

சிங்காநல்லூரில் வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியைக் கொண்டு சென்று வாக்களித்ததை விடியோ எடுத்த பெண் மீது பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :25 ஏப்ரல் 2026, 7:32 pm

சிங்காநல்லூரில் வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியைக் கொண்டு சென்று வாக்களித்ததை விடியோ எடுத்த பெண் மீது பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது, வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. வாக்களிக்கச் செல்வோா், தங்கள் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்து செல்ல வாக்குச் சாவடி நுழைவாயிலில் தனியாக பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆவாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு நடைபெற்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியைக் கொண்டு சென்று, தான் வாக்களித்ததை கைப்பேசியில் விடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதைப் பாா்த்த வாக்குச் சாவடி அதிகாரிகள் அப்பெண்ணை எச்சரித்துள்ளனா். அதைப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் வாக்குப் பதிவை மீண்டும் விடியோ எடுத்ததால் அவா் போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா்.

விசாரணையில், அவா் ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்த கௌசல்யா (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.