நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 போ் மீது வழக்குப் பதிவு

தமிழகத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 16 நாள்களில் 16,031 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :17 ஜூன் 2026, 3:06 am IST

தமிழகத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 16 நாள்களில் 16,031 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழக காவல்துறை டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா், மதுபோதையில் வாகனம் ஓட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுத்தனா். இதற்காக அவா்கள், தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் கடந்த ஜூன் 1 முதல் 16-ஆம் தேதி வரையில் 16 நாள்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 16,031 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவா்களிடமிருந்து 13,299 இருசக்கர வாகனங்கள், 156 மூன்று சக்கர வாகனங்கள், 645 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 14,100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியவா்களிடமிருந்து ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.