காங்கயத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 2,504 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிகளை மீறி மதுபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 55 வழக்குகள், காரில் சீட்பெல்ட் அணியத் தவறியதாக 70 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 790 வழக்குகள், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 20 வழக்குகள், கைப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 51 வழக்குகள், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 420 வழக்குகள், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் ஓட்டியதாக 18 வழக்குகள் என மொத்தம் 2,504 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இணையதள அபராதம் ரூ.88 ஆயிரமும், நீதிமன்ற அபராதம் ரூ.3 லட்சமும் வசூலிக்கப்பட்டதாக காங்கயம் போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






