/
காங்கயத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மே மாதத்தில் மட்டும் 2,005 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காங்கயத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், குடிபோதையில் வாகனங்களை இயக்கியதாக 52 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் காரை இயக்கியதாக 49 வழக்குகள், தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 801, அதிவேகமாக வாகனங்களை இயக்கியதாக 10 வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் காரணமாக கடந்த மே மாதத்தில் மட்டும் 2,005 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், இணையதள அபராதம் ரூ.55 ஆயிரமும், நீதிமன்ற அபராதம் ரூ.50 ஆயிரமும் வசூலிக்கப்பட்டதாக காங்கயம் போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.








